ஆனால் உண்மையில் தமிழகத்துக்கு காவிரியில் தண்ணீர் வழங்கும் அணைகள் ஏறக்குறைய முழு கொள்ளளவை எட்டும் நிலையில் உள்ளதும். ஆனாலும் கர்நாடகா முதல்வர் டிகே சிவக்குமார் இன்னும் தண்ணீர் திறக்காமல் உள்ளதும் தெரியவந்துள்ளது.
கர்நாடகாவை எடுத்து கொண்டால் காவிரியில் நீருக்கு ஆதாரமாக மொத்தம் 4 அணைகள் உள்ளன. ஒன்று ஹாரங்கி. 2வது ஹேமாவதி. 3வது கேஆர்எஸ். 4வது கபினி.
இதில் ஹாரங்கி, ஹேமாவதி அணைகளில் இருந்து கேஆர்எஸ் அணைக்கு தண்ணீர் வரும். அதன்பிறகு கேஆர்எஸ் அணையில் இருந்து தமிழகத்துக்கு காவிரியில் தண்ணீர் திறந்து விடப்படும். அதேபோல் கபினி அணையில் இருந்தும் தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விடப்படும். தற்போது இதில் 3 அணைகள் முழு கொள்ளவை எட்டி உள்ளன.
அதன்படி இன்று காலை நிலவரப்படி ஹாரங்கி அணையின் மொத்த உயரம் கடல் மட்டத்தில் இருந்து 2,859 அடியாகும். இதில் இனுறு அணையின் நீர்மட்டம் 2,857.83 அடியை எட்டி உள்ளது. இன்னும் 2 அடி மட்டுமே பாக்கி உள்ளது. அதேபோல் ஹேமாவதி அணையின் நீர்மட்டம் 2922 அடியாகும். தற்போது இந்த அணையின் நீர்மட்டம் 2,909 அடியை எட்டி உள்ளது. இன்னும் 13 அடி மட்டுமே பாக்கி உள்ளது.